ஆந்திரா ஸ்டைல் சிக்கன் பிரை செய்வது எப்படி

ஆந்திரா ஸ்டைல் சிக்கன் பிரை



தேவையான பொருட்கள் :

சிக்கன் - 200 கிராம்
சின்னவெங்காயம் - 50 கிராம்
தக்காளி - 1 சிறியது
பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலை - தேவையான அளவு
சோம்பு, சீரகம் - தலா அரை டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 20 கிராம்
மல்லித்தூள் (தனியாத்தூள்) - 15 கிராம்
மஞ்சள்தூள், உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 40 மில்லி
இஞ்சி - பூண்டு விழுது - 15 கிராம்
கொத்தமல்லித்தழை - சிறிதளவு.
உப்பு - தேவையான அளவு

செய்முறை :

சிக்கனை நன்றாக சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக வெட்டி வைக்கவும்.

தக்காளி, சின்ன வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி வைக்கவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி சோம்பு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளித்த பின்னர் பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் சற்று வதங்கியதும் இதில் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

அடுத்து அதில் ததக்காளி சேர்த்துக் கரைய வதக்கவும்.

தக்காளி நன்றாக வதங்கியதும் சிக்கன் துண்டுகள் சேர்த்து, இரண்டு நிமிடம் வதக்கி மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்), உப்பு சேர்த்து வதக்கவும்.

சிறிதளவு தண்ணீர் சேர்த்து 10 நிமிடம் வேகவைத்து தண்ணீர் சுண்டியதும் கொத்தமல்லித்தழையைத் தூவி சூடாகப் பரிமாறவும்.

சூப்பரான ஆந்திரா ஸ்டைல் சிக்கன் பிரை ரெடி.

தயிர் சாதம், ரசம் சாதம், சப்பாத்தி, ரொட்டிக்கு நல்ல சைடிஷ்.

Comments